சனி என்பது வேகக் குறைவைக் குறிக்கும். சோம்பலைக் குறிக்கும். அவர் விந்தி விந்தி நடப்பதால் உடல் ஊனத்தைக் குறிக்கும். எனவே சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஏழரைச் சனி,அஷ்டமச் சனி போன்ற பாதிப்பில் இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.

கறுப்புநிற ஆடை போர்வை கம்பளிதானம் செய்யுங்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுங்கள். இவைகள் காலம் காலமாகச் செய்யப்படும் பரிகாரங்கள். ஆனால் இதற்கு மேல் கொண்டு நான் சொல்லுகின்றேன்.
இந்த காரியத்தை இன்றே முடித்தாக வேண்டும் என்று திட்டமிட்டு முடியுங்கள். நல்ல ஆலோசனைகளைக் கேட்டு காரியங்களை செய்யுங்கள். யாருக்கும் எந்த தீமையும் நினைக்காதீர்கள். இதைச் செய்தாலே பெரும்பாலும் சனிதோஷத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம்.