Share
அமாவாசை, நிறைந்த நாள் என்கிறார்கள். அன்றைய தினத்தில் எதைச் செய்யலாம்?எதைச் செய்யக்கூடாது?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Answer ( 1 )
Please briefly explain why you feel this answer should be reported.
அமாவாசை நாளில், திருமணம் போன்ற சுப விசேஷங்கள் செய்யக் கூடாது. அது பிதுர்களுக்கு உரிய தினம். பிதுர்கள் என்றால், நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். அமரர்களை வேண்டித் துதித்து, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறும் நாள் அமாவாசை. அந்த நாளில், அசையாச் சொத்து வாங்குவது, பத்திரப் பதிவு செய்வது, வீடு மனை, நிலம் வாங்க முன்பணம் கொடுப்பது, சொத்து தொடர்பான விஷயங்களில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது, வழக்கு தொடுப்பது, புகார் பதிவு செய்வது, நீதி கேட்டுப் போராட்டம் செய்வது போன்றவை செய்யலாம்.
கல்வி கற்க ஆரம்பிப்பதும் கூடாது. அரசு அதிகாரிகளிடம் மனு கொடுக்க அது உகந்த நாள். அமாவாசையைவிட பௌர்ணமிதான் நிறைந்த நாள். அதுவே மதி நிறைந்த நல்ல நாள். அமாவாசையன்று தான தர்மங்கள் செய்வதும் பரிகாரங்கள் செய்வதும் நல்லது.