கிருஷ்ண வழிபாடு
கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தபோது விழித்துக் கொண்டு இருந்தவர்கள் மூவர் மட்டுமே என்கிறது விஷ்ணு புராணம். வசுதேவர், தேவகி இருவரைத் தவிர மூன்றாவதாக விழித்திருந்தவன் சந்திரன். அதாவது நிலவு. எனவே, நிலவு தோன்றும் நேரம்தான் கிருஷ்ணனை பூஜிக்க ஏற்ற நேரம்.
கிருஷ்ணனை வழிபட பெரிதாக நைவேத்தியம் செய்ய வேண்டும் என்றில்லை; கொஞ்சம் தீர்த்தம் அர்ப்பணித்தால்கூட போதும். ஒரு மலர் அல்லது ஒரு இதழ் துளசி போதும்; கிருஷ்ணனின் அகம் குளிர்ந்து விடும். தர்மம் உள்ள இடத்தில் கிருஷ்ணன் இருப்பான். கிருஷ்ணனின் அருள் உள்ள இடத்தில் வெற்றி நிலைத்து நிற்கும்.