விபரீத ராஜயோகம்
பொதுவாக 6,8,12 அதிபதிகள், தங்களுக்குள் இடம் மாறி இருந்து,(பரிவர்த்தனை) அல்லது மறைவு பாவக அதிபதி மற்றொரு மறைவு பாவகத்தில் மறைந்து , அதனுடைய தசா புத்திகள் நடக்கும் காலகட்டங்களில், ஒருவருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும் என்று பொதுவான விதியாக சொல்லப்பட்டுள்ளது.
பன்னிரு ஸ்தானங்களின் வலிமையாக தீமை செய்யும் பாவங்கள் 6,8,12 என்பது நாம் அறிந்த ஒன்றே . இதன் ஸ்தான அதிபதிகளும் துஷ் ஸ்தான அதிபதிகளே . இந்த ஸ்தான அதிபதிகளுக்கும் , 5 ம் ஸ்தானம் மற்றும் ஒன்பதாம் ஸ்தானம் அதிபதிகளுக்கும் இடையே , தீய , நல்ல பலனைச் செய்வதில் அதிக வேறுபாடு உண்டு .
பூர்வ புண்ய அதிபதி , பாக்யாதிபதி இவர்கள் குளத்தில் உள்ள மீனைப் போன்றவர்கள்! ஆகவே இவர்கள் எந்த பாவத்தில் அமர்ந்தாலும் , அந்த ஸ்தான பாவத்தில் உள்ள அழுக்குகளை அதை தூய்மை செய்து விடுவார்கள் ! 5 ம் அதிபதி 6 ம் ஸ்தானத்தில் அமர்ந்தால் , 6 ம் பாவக தீய பலன்கள் வெகுவாக குறையும் . நோய் உண்டானாலும் உடன் குணமாகும் . எதிர்ப்பு ஏற்பட்டாலும் அது உடனே மறையும் . கடன் இருப்பினும் அவை அதிகம் தொல்லை தராது எனலாம் .
ஆனால் 6 , 8 , 12 ம் அதிபதிகள் ஒரு அறையில் உள்ள மூட்டைப் பூச்சியைப் போன்றவர்கள் . இவர்கள் எங்கே அமர்ந்தாலும் அந்த ஸ்தானத்திற்கு கடும் தொல்லையைக் கொடுப்பவர்கள் எனலாம் .
ஆக தொல்லையை கடுமையாக கொடுக்கும் இந்த துஷ் ஸ்தான அதிபதிகள் , தொல்லைகள் செய்யும் ஸ்தானங்களில் அமரும் நிலை உண்டானால் அதுவே வெற்றி தரும் விபரீத ராஜயோகமாகும் . இதையே தமிழ் சாஸ்திரம் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம் ‘ எனச் சொல்கிறது .

உத்திரகாலாமிர்தம் சொல்வது என்னவெனில் :
8 ம் அதிபதி , 6 அல்லது 12 ல் ;6 ம் அதிபதி 8 அல்லது 12 ல் ; 12 ம் அதிபதி 6 அல்லது 8 ல் ; இவ்விதம் அமர்வது அல்லது பார்வை ,இணைவு ,பரிவர்த்தனை தொடர்புகள் மூலம் ஒன்றுபடுவது ஆகியவை ராஜயோகதிற்கு சமமான யோகம் செய்யும் . ஆனால் மற்ற பாவ அதிபதிகள் யாரும் இவ்வகை கிரக இணைவுடன் எவ்வகையிலும் தொடர்பு கொள்ளவே கூடாது . 6,8,12 ம் அதிபதிகள் இணைவு மட்டுமே அமைய வேண்டும் .இந்த நிபந்தனைகளுக்கு உள்பட்டு இவ்வகை கிரக நிலை ஜெனன ஜாதகத்தில் அமைந்தால் இது அற்புதமான யோகம் .
இனி பன்னிரண்டு லக்னங்களுக்கும் இந்த துஷ் ஸ்தான அதிபதிகள் அமையும் நிலையில் உண்டாகும் நல்ல ,தீய பலன்களை பார்வை செய்வோம்.
1 . மேஷம்
செவ்வாய் ( 8 ம் அதிபதி ), 6 ல் அமர்ந்தால் ,குறைந்த அளவே நல்ல பலன்களை உண்டாகும் .செவ்வாய் ,புதனோடு ( ஆறாம் அதிபதி ) 6,8 12 ல் அமர்ந்தால் மன அமைதியை கொஞ்சம் பாதிக்கும் . நோயைக் தரலாம் .குரு (பனிரெண்டாம் அதிபதி) மத்திம பலனை 12 ல் ஆட்சியில் அமர தரலாம் .12 ல் புதன் நல்ல பலன் செய்யும் .குரு ,செவ்வாய் 8 அல்லது 12 ல் அமர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .புதன் 6 ல் அமர குருவின் பார்வை பெற்றால் நல்ல ராஜயோகமே!
2 . ரிஷபம்
சுக்கிரன் ( 6 ம் அதிபதி ) 8 அல்லது 12 ல் அமர நன்மை . 8 ல் குரு ( எட்டாம் அதிபதி) அமர ராஜ யோகம் செய்தாலும் , புத்திரபாக்கியம் , குடும்ப சுகம் ,இவைகளை பங்கம் செய்யும் .
குருவும் ,சுக்கிரனும் 6 ,8 ,12 ல் இணைந்து அமர்வது அதிகம் ரிஷப லக்னத்திற்கு நன்மையில்லை .செவ்வாய் திசைக்காலத்தில் கடன் தொல்லையை உண்டாக்கி விடும் .
3 . மிதுனம்
சனி ( எட்டாம் அதிபதி ) தனித்து 6,8,12 ல் அமர்வது ,அதே போல் சனியும் ,சுக்கிரனும் (பனிரெண்டாம் அதிபதி) 6,8,12 ல் அமர்வது அதிகம் நன்மையில்லை .குறிப்பாக ஏட்டில் அமர்வது கடும் தீய பலன்களைச் செய்யும் .
சுக்கிரன் தனித்து 8,12 ல் அமர்வது நன்மையே .செவ்வாய் (6 ம் அதிபதி) தனித்து 6,8,12 ல் அமர நன்மையே .எட்டாம் அதிபதி சனியுடன் இணைந்து அமர்வது மத்திம பலன் செய்யும் . செவ்வாயும் , சுக்கிரனும் 12 ல் அமர்ந்து சனியின் பார்வை பெறுவது நல்ல யோகமே ! எட்டில் சுக்கிரன் ,செவ்வாய் ,புதன் இணைவதும் பிரபல ராஜயோகம் செய்யும்.
4 . கடகம்
சனி( எட்டாம் அதிபதி ) 6 ல் அமர நன்மையில்லை .குரு (6 ம் அதிபதி ) மற்றும் புதன் ( 12 ம் அதிபதி ) இவர்களின் இணைவு 6,8,12 ல் அமர்வது நன்மையில்லை ! குரு + சனி இவர்கள் இணைவது நன்மையே ! அதே போல் புதன் 6,8,12 ல் அமர்வது நல்ல பலன் செய்யும் .குரு + சனி 6,8 ல் அமர்வது சில சமயம் நல்ல பலன் அமையும் .
5 . சிம்மம்
சனி (ஆறாம் அதிபதி ) 6,8 ல் அமர்வது நன்மை அதிகம் இல்லை .குருவின் பார்வை பெற்றால் நல்ல பலன் உண்டு .குரு 6,8,12 ல் அமர்வது நன்மையே செய்யும் .சந்திரன் (பனிரெண்டாம் அதிபதி) 12 ல் ஆட்சி பெறுவதும் நன்மை செய்யும் . அதே போல் சனி , சந்திரன் இணைவு துஷ் ஸ்தானங்களில் உண்டாவது நன்மையே செய்யும் .சந்திரன் ( 6 ல் -மகரம் ) ,சனி பனிரெண்டில் (கடகம்) அமர பரிவர்த்தனை பெறும் யோகம் சனி மகா திசைக் காலத்தில் நன்மை செய்யும்
6 . கன்னி
செவ்வாய் (8 ம் அதிபதி) 6,8 அமர்வது தீய பலன் செய்யும் . பனிரெண்டில் ,சிம்மத்தில் அமர ஏற்ற ,இறக்கமான வாழ்க்கை உண்டாகும் . சனி ( 6 ம் அதிபதி ) 12 ல் அமர மத்திம பலனைச் செய்யும் எனலாம் .சூரியன் ( 12 ம் அதிபதி ) ,செவ்வாய் பரிவர்த்தனை அல்லது 6 ல் சனி ,12 ல் சூரியன் ஆட்சி பெறுவதும் மத்திம பலன் செய்யும் .சனி , செவ்வாய் 12 ல் அமர்வது நல்ல யோகமே!
7 . துலாம்
சுக்கிரன் (எட்டாம் அதிபதி) எந்த துஷ் ஸ்தானத்தில் (6,8,12 ல் ) அமர்ந்தாலும் நன்மை செய்யலாம் . இதேபோல் புதன் ( பனிரெண்டாம் அதிபதி )+ குரு ( ஆறாம் அதிபதி ) இவர்களும் 6,8,12 ல் அமர நன்மை அமையும் . இம் மூன்று துஷ் ஸ்தான அதிபதிகளுக்குள் உண்டாகும் பரிவர்த்தனை நிலையும் நல்ல யோகம் செய்யும் அமைப்பே!
8 . விருச்சிகம்
செவ்வாய் (6 ம் அதிபதி ) 6,8 ல் நிற்பது மத்திம பலன் ! புதன் (எட்டாம் அதிபதி) 6 மற்றும் 12 ல் நிற்பது பலன் நன்மையாக இல்லை .அதே போல் செவ்வாயும் ,புதனும் இணைவு பெற்று 6,8,12 ல் நிற்பதும் நல்ல பலன் தராது எனலாம் .சுக்கிரன் (விரயாதிபதி) 6,12 ல் நிற்பது நல்ல பலன் செய்யும் .ஆனால் சுக்கிரன் ,புதன் இணைவு 6,8,12 ல் அமைவது தீமையே . புதன் தனித்து 12 ல் அமர நன்மையான யோகமே . சுக்கிரன் ,செவ்வாய் எட்டில் இணைய பொருளாதாரம் செழிப்பாக அமையும் .புதன் -செவ்வாய் பரிவர்த்தனையும் நன்மை செய்யும் .
9 . தனுசு
6 ம் அதிபதி சுக்கிரன் . 8 ம் அதிபதி சந்திரன் .12 ம் அதிபதி செவ்வாய்.இதில் செவ்வாய் அல்லது சுக்கிரன் 6,8,12 ல் அமர்வது நல்ல யோகம் செய்யும் .சந்திரன் 6,8 ல் நிற்பதை விட 12 ல் நீசமாகி அமர்வது நல்ல யோகம் செய்யும் .12 ல் செவ்வாய்+சந்திரன் இணைவும் நன்மை செய்யும் எனலாம் . இரண்டில் சந்திரன் (மகரம்) நிற்க , அதை செவ்வாய் எழில் நின்று பார்ப்பது நன்மையே .
10 . மகரம்
6 ம் அதிபதி புதன் . 8 ம் அதிபதி சூரியன் .12 ம் அதிபதி குரு ஆவார்கள் .இதில் சூரியன் தனித்து 6,8,12 ல் நிற்பது நன்மை செய்யாது.சுரியனுடன்,புதனும் இணைந்து இங்கே நிற்பது நல்ல யோகம் செய்யும் .புதன் தனித்து 6 ல் நிற்பதை விட 8,12 ல் நிற்பது நன்மை செய்யும் .குரு + புதன் இணைவு 6,12 ல் மட்டும் நன்மை ,8 ல் இணைவது சிறப்பல்ல ! சூரியன் ,புதன் ,குரு இணைவு 6 , 12 மட்டுமே நன்மை .செவ்வாய் 6 ல் நிற்க பனிரெண்டில் குரு நின்று பார்ப்பது நன்மை செய்யும் எனலாம்.
11 . கும்பம்
6 ம் அதிபதி சந்திரன் . 8 ம் அதிபதி புதன் . பனிரெண்டாம் அதிபதி சனி .இதில் சந்திரன் 6,12 ல் நிற்பது தீமையே .8 ல் நிற்கலாம் . சனி ,சந்திரன் 6,8,12 ல் உண்டாவதும் நல்ல பலன்களைத் தடை செய்யும். சனி 6 ,12 ல் நிற்பது நன்மையே .புதன் 12 ல் நன்மை .புதன் இரண்டில் அமர எட்டில் சனி நின்று பார்ப்பது நன்மை .
12 . மீனம்
சனி 12 ம் அதிபதி 6 , 12 ல் அமர உள்ள நிலை உன்னதமே .எட்டில் சனி தடை ,தாமதம் செய்யும் .சூரியன் 6 ல் நிற்பது நல்ல பலன் . 8,12 ல் நிற்பது மத்திம பலனே ! சுக்கிரன் 8 ல் நிற்பது சிறப்பு . 6 ,12 ல் நிற்பது நோய் ,தடை இவை உண்டாக்கும் . சனியும் ,சுக்கிரனும் இணைவது மிகவும் நன்மை செய்யும் .
இவை எல்லாம் பன்னிரு லக்னங்களின் துஷ் ஸ்தான அதிபதிகளை தொடர்பைக் குறித்து சொல்லப்பட்டவை .இவ்வகை அமைப்பே விபரீத ராஜ யோகம் செய்யும் .
இந்த துஷ் ஸ்தான அதிபதிகளின் 8,12 ம் அதிபதிகளை விட 6 ம் அதிபதி மிகவும் தீமை செய்பவர் அல்ல! இது உபஜெய ஸ்தானம் அல்லவா! ஆகவே 6 ம் அதிபதியும் ,பாக்கிய ஸ்தான அதிபதியான ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனை பெறுவதும் நல்ல ராஜ யோகமே .
ஒரு நன்மையான பாவாதிபதியும் ,ஒரு தீமையான பாவாதிபதியும் பரிவர்த்தனையில் அமையும் முதல் தர ராஜ யோகம் இது . ஆனாலும் 6 ம் அதிபதி ஒரு நல்ல கிரகம் அல்ல என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் . ஏழாம் அதிபதியுடன் இணைவு எனில் திருமணம் சம்பந்தமான சிக்கல்களை உண்டாக்கும் .நான்காம் அதிபதியுடன் இணைவு எனில் வண்டி,வாகனம் ,வீடு ,மனை இவைகளின் வில்லங்கம் உண்டு பண்ணும் .ஒன்பதாம் அதிபதியுடன் இணைந்தால் ( பரிவர்த்தனை அல்ல ) அயல்நாடு சம்பந்தமான விஷயங்களில் சிக்கல்களை உண்டு பண்ணும் .
இந்த 6,8,12 ம் அதிபதிகளால் உண்டாகும் யோக நிலையை பலதீபிகை சாஸ்திரம் இன்னும் தெளிவாகச் சொல்கிறது . 6,8,12 ம் அதிபதிகள் பன்னிரண்டு பாவங்களில் எங்கே அமர்ந்தாலும் , அக்கிரகத்தை இயற்கை பாவக்கிரகங்கள் பார்க்கவே ,இணையவோ செய்தல் உண்டாகும் யோகங்களைச் சொல்கிறது .
இவ்வகை கிரக நிலை 1. அவயோகம் 2. நிஸ்வா யோகம் 3. மிருத்யோகம் 4. குசு யோகம் 5. பாமர யோகம் 6. துர் யோகம் 7. தரித்திர யோகம் 8. ஹர்ஷ யோகம் 9. துஷ் கீர்த்தி யோகம் 10. சரள யோகம் 11. நிர் பாக்ய யோகம் 12. விமல யோகம் என வகைப்படுகிறது .இதில் (6) ஹர்ஷ யோகம் என்பது நன்மை செய்யும் யோகம் .