மீன ராசி

இரண்டு மீன்கள் உள்ளன- எதிரும் புதிருமாக செல்லும் மாறுபட்ட கருத்தை உடையவர்கள்.
இரண்டு மீன்களுக்கிடையே ஒரு நூல் இணைப்பு காணப்படுகிறது. இது ஒருவரை ஒருவர் பிரியாத நிலையை காட்டுகிறது.
மீன்கள். அதன் செதில்கள் அழகாக இருக்கும். உடை விசயத்தில் கவனம் செலுத்துவார்கள் அழகாக இருப்பார்கள்.
மீன்கள் பாசனத்தை சுத்தம் செய்யும். ஆதனால் தன்னையும் தன்னை சுற்றி உள்ள இடத்தையும் சுத்தம் செய்வார்கள்.
மீன்கள் ஒன்றுக்கொன்று சண்டை இடாது. ஒற்றுமையுடன் வாழும் தன்மை கொண்டவர்கள், கூட்டாக வாழ நினைப்பவர்கள்.
தண்ணீரை விட்டு வந்து விட்டால் மீன் உயிர் வாழாது. தன் இருப்பிடத்தை விட்டு வர நினைக்காதவர்கள்.
மீனை வலை வீசி பிடிக்கலாம். காதல் உணர்ச்சி வசப்படுபவர்கள்.