கோடீஸ்வர யோகம்
சாயா கிரகங்கள் எனப்படும் ராகுவும் கேதுவும் 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்கும் போது கோடீஸ்வர யோகத்தை தருகிறது. ராகுவுக்கு ஏழில் குரு-கேது சேர்க்கை ஏற்பட்டாலும், ராகுவுக்கு ஒன்பதாவது ராசியில் புதனும் சுக்கிரனும் கூடினால் திடீர் என தனப்பிராப்தி , லாட்டரி மூலம் பணவரவு ,அனாமத்து வரவு ஆகிய போன்ற யோகமும் கைகூடும்.
மேஷம், ரிஷபம், கடகம், கன்னி ,மகரம் ஆகிய இடங்களில் ராகு இருந்தால் ராஜயோக பலன்கள் ஏற்படும். யோகம் கூடிய ஜாதகமானால் பால்ய வயதிலும் சராசரி யோகம் மத்திய வயது முதல் கிடைக்கும். அவயோகமானால் முதிர்ந்த வயதிலும் தப்பாமல் ஏற்படும். பெரும் செல்வந்தர்களாக வருவதற்கும், பல பேருக்கு உபகாரியாக விளங்க வேண்டுமானால் கோடீஸ்வர யோகம் ஏற்பட வேண்டும்.