பகவத் கீதை
உண்மைதான். ஆனால் பகவத் கீதையோடு “விஷ்ணு சகஸ்ரநாமம், யட்சப் பிரச்னம்” விதுர நீதி போன்ற பல பகுதிகளும் நாம் அவசியம் படிக்க வேண்டிய சிறந்த பகுதிகள் தான். இன்னும் சொல்லப்போனால் மோட்ச தர்மம் என்ற ஒரு பகுதி உண்டு. அதிலே இல்லாத தர்ம சாஸ்திர விஷயங்களே கிடையாது. இப்பொழுது விதுர நீதியை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒரு துளி சொல்கிறேன் ஒருவன் முன்னேறுவதற்கு தடையாக ஆறு குணங்கள் இருப்பதாக விதுர நீதி சொல்கிறது.

1.அளவுக்கு மிஞ்சிய தூக்கம்
2.அறிவுமயக்கம்
3.தேவையற்ற பயம்
4.ஆத்திரம்
5.சோம்பல்
6.எதையும் தாமதமாக செய்தல்
என இந்த ஆறு குணங்களும் முன்னேற்றத்திற்கு எதிரிகள் என அழுத்தமாக சொல்கிறது. இப்படி பல விஷயங்கள் விதுர நீதியில் இருக்கின்றன. இவை படித்தால் நம் வாழ்வு முன்னேறும். அறிவு தெளிவு ஏற்படும்