நிர்மால்யம்
பூஜை அறையில் சுவாமி படத்துக்குப் பூக்களைப் போடுகிறோம். அடுத்தநாள் அந்த பூக்களை எடுத்து விடுகின்றோம். ஏற்கனவே போட்டு எடுத்த பூக்களை “நிர்மால்யம்” என்பார்கள். கோயிலிலும் சுவாமிக்கு போட்டிருந்த மாலைகளைக் களைந்தால் அந்த மாலைகளை “நிர்மால்யம்” என்பார்கள். இந்த நிர்மால்யங்களை நாம் ஒரு கூடை யில் சேகரித்து, குப்பையில் சேர்க்காமல், ஓடுகின்ற நீரில் சேர்க்க வேண்டும்; அல்லது கால் படாத இடத்தில் சேர்க்க வேண்டும்.

நிர்மால்யத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். கண்ட இடத்தில் வைப்பதோ, அசுத்தமான இடத்தில் வைப்பதோ கூடாது. அது தெய்வ குற்றம் போன்றதுதான்.