பலன் இல்லாமலா? நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்திருக்கிறார்கள். ஒரு சுபகாரியம் என்றால் வாழை மரத்தையும், மாவிலை தோரணத்தையும் தான் கட்டுவார்கள். அந்த மாவிலை தோரணத்தின் மகத்துவம் நமக்கு இப்போது தெரியவில்லை…. மாவிலை எதிர்மறை சக்தியை விரட்டும் ஆற்றல் பெற்றது. மந்திர சக்திகளை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. வீட்டில் மாவிலை கட்டுவதன் மூலம் தூய்மை அதிகரிக்கிறது.

நல்ல சக்தியும் ஆற்றலும் ஈர்க்கப்படுகிறது, தூண்டப்படுகிறது. இப்போது அசல் மாவிளைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலைகளை கட்டுகிறார்கள்… அது அலங்காரமாக இருக்கலாம். ஆனால் பயன் இல்லை. அது பூஜைக்குரிய தகுதி படைத்ததல்ல.